மேலும் செய்திகள்
க.பரமத்தி, அணைப்பாளையத்தில் கனமழை
11-Oct-2025
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம்: கரூர், 4.20, அணைப்பா-ளையம், 8.40, க.பரமத்தி, 1.80, குளித்தலை, 4.40, தோகை-மலை, 11, மாயனுார், 4, பஞ்சப்பட்டி, 3, கடவூர், 6, பாலவிடுதி, 10, மயிலம்பட்டி, 12 மி.மீ., மழை பதிவானது. மாவட்டம் முழு-வதும் சராசரியாக, 5.40 மி.மீ., மழை பதிவானது.* மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்-படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 7,113 கன அடியாக இருந்தது. அதில், டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடிக்காக வினா-டிக்கு, 5,643 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. மேலும், கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்-ணராயபுரம் பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீர் திறக்-கப்பட்டது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 8.98 அடி-யாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணைப்பகுதியில், 4.4 மி.மீ., மழை பெய்தது.
11-Oct-2025