சாலையில் விழும் தென்னை மட்டைகளால் விபத்து அபாயம்
சாலையில் விழும் தென்னைமட்டைகளால் விபத்து அபாயம்கரூர், அக். 1-கரூர் வேலாயுதம்பாளையம், வாங்கல் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில், அதிகளவு தென்னை மரங்கள் உள்ளன. ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு, காய்ந்த தென்னை மட்டைகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேன், லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இதனை ஏற்றி செல்லும் பெரும்பாலான வாகனங்கள், மேற்புறம் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படுவதால், சில மட்டைகள் சாலைகளில் விழுகின்றன. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலையின் மையப்பகுதியில் விழும் மட்டைகளால், இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். எனவே, தென்னை மட்டைகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல, அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்.