உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

குளித்தலை, குளித்தலை அடுத்த கூடலுார் பஞ்., பொம்ம நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 42. விவசாய கூலித் தொழிலாளி. இவரது, 16 வயது மகள் புஷ்பவள்ளி தனியார் பஞ்சு மில்லில் கடந்த ஓராண்டாக வேலை செய்து வந்தார். கடந்த, 2ல் உடல்நிலை சரியில்லாததால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் வீட்டுக்கு தந்தை முருகேசன் அழைத்து வந்தார்.நேற்று முன்தினம் மதியம் 1.00 மணியளவில் தாய், தநதை இருவரும் வேலையை முடித்து, வீட்டில் வந்து பார்த்தபோது. மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை, தந்தை கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை