உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரங்கநாத சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம்: பக்தர்கள் பரவசம்

ரங்கநாத சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம்: பக்தர்கள் பரவசம்

கரூர்: கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, பகல் பத்து உற்வசம் நேற்று நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று தொடங்கியது. அதை தொடர்ந்து, பகல் பத்து உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். வரும், 9ல் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 10 அதிகாலை, 4:30 மணிக்கு, பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பிறகு, ராப்பத்து நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ