உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழிமலை கோவில் முருகனுக்கு அலங்காரம்

புகழிமலை கோவில் முருகனுக்கு அலங்காரம்

கரூர்: புகழிமலை, பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்-தனம்,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, விபூதி, தேன் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்-களால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பாலசுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்-வங்களை தரிசனம் செய்தனர்.* புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரம-ணியர் கோவில், நன்செய்புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரம-ணியர் கோவில், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ