உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தரம் உயர்த்தப்பட்ட ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர் நியமிப்பதில் தாமதம்

தரம் உயர்த்தப்பட்ட ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர் நியமிப்பதில் தாமதம்

கரூர் :கரூர் மாவட்டத்தில், தரம் உயர்த்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்வதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில், எஸ்.ஐ., தலைமையில் இயங்கும் சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன. அதில், பல போலீஸ் ஸ்டேஷன்களை, இன்ஸ்பெக்டர்கள் பணி நியமனம் செய்யும் வகையில், தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த ஆக., 4ல், 280 சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.கரூர் மாவட்டத்தில் வாங்கல், தான்தோன்றிமலை, வெள்ளியணை, சின்னதாராபுரம் மற்றும் தென்னிலை ஆகிய ஐந்து சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள், எஸ்.ஐ.,க்கள் தலைமையில் இயங்கி வருகிறது. தற்போது, ஐந்து போலீஸ் ஸ்டேஷன்களும், இன்ஸ்பெக்டர்கள் பணி நியமனம் செய்யும் வகையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.அதில், வாங்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு மட்டும் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளார். மீதமுள்ள தான்தோன்றிமலை, வெள்ளியணை, சின்னதாராபுரம், தென்னிலை போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இன்ஸ்பெக்டர் நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விரைவாக தரம் உயர்த்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, இன்ஸ்பெக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, கரூர் மாவட்ட போலீசார் இடையே ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை