பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி: பக்தர்கள் பங்கேற்பு
கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று அமராவதி ஆற்றின் கரை-யோர பகுதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 3ல் கொடி-யேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது.அதை தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில் உற்சவர் திருவீதி உலா, சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி, திருக்கல்-யாண உற்சவம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை, பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அம-ராவதி ஆற்றின் கரையோர பகுதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்-தது. முன்னதாக, பசுபதீஸ்வரர், அலங்கார வள்ளி, சவுந்திர நாயகி, நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள் சிறப்பு வாகனங்களில் திரு-வீதி உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.இன்று ஆளும் பல்லக்கு, நாளை ஊஞ்சல் உற்சவம், வரும், 15ல் வெள்ளி வாகனத்தில், உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்-சிகள் நடக்கின்றன.