நாமக்கல் : நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 530 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 535 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கொள்முதல் விலை, மூன்று நாட்களில், 15 காசு அதிகரித்துள்ளது. முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, பண்ணையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 570, ஐதராபாத், 500, விஜயவாடா, 490, பர்வாலா, 425 மும்பை, 57, மைசூரு, 575, பெங்களூரு, 575, கோல்கட்டா, 525, டில்லி, 450 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதேபோல், நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 98 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையில் எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 140 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலையிலும், எவ்வித மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.