மேலும் செய்திகள்
சாலையோரம் முள் செடிகள் வாகன ஓட்டிகள் அவதி
06-Sep-2024
மோசமான சாலை ஓட்டுனர்கள் அவதி
20-Sep-2024
கிருஷ்ணராயபுரம்: பாலப்பட்டி சாலையில் முள் செடிகள் ஆக்கிரமிப்பால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பாலப்பட்டி, மேட்டுப்பட்டி தார்ச்சாலை செல்கிறது. இந்த சாலையை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, சாலையின் இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால், இரவில் செல்லும்போது, எதிர்வரும் வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிட முடியாத நிலை உள்ளது. மேலும், முள் செடிகள், வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்த்து வருகின்றன. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சாலையில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற பஞ்., நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
06-Sep-2024
20-Sep-2024