இ.பி.எஸ்., பிறந்த நாள் விழா
கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,சின் பிறந்த நாளையொட்டி, கல்யாண பசுப-தீஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.அதில், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபி ேஷகம் நடந்தது. பின்னர், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கு-வதை, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்ச-ருமான விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், நிர்வாகிகள் ஆலம் தங்கராஜ், சரவணன், ஒன்-றிய செயலாளர் கமல கண்ணன், பகுதி செயலாளர்கள் சக்திவேல், சுரேஷ், சேரன் பழனிசாமி உள்-பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, ஈரோடு மண்டல அ.தி.மு.க., ஐ.டி., விங்க் சார்பில், தான்தோன்றி மலையில் தனியார் திருமண மண்டபத்தில், ரத்ததான முகாம் நடந்தது. நிர்-வாகிகள், தொண்டர்கள் ரத்ததானம் வழங்கினர்.