காய்கறிகள் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
கிருஷ்ணராயபுரம், டிச. 14-கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், விவசாயிகள் காய்கறி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், கோவக்குளம், பஞ்சப்பட்டி, குச்சிப்பட்டி, வேப்பங்குடி, பாப்பகாப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. காய்களை பறித்து உள்ளூர் வார சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். நேற்று கத்திரிக்காய் கிலோ, 40 ரூபாய், வெண்டைக்காய் கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது.