எள் அறுவடை பாதிப்பு விவசாயிகள் கவலை
கிருஷ்ணராயபுரம்: : கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர், மேட்டுப்பட்டி, குழந்தைப்பட்டி, சிவாயம், பாப்பக்காப்பட்டி, சரவணபுரம், வயலூர் ஆகிய இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது. மழை காரணமாக மானாவாரி நிலங்களில் எள் அறுவடை பணி பாதிக்கப்பட்டது. வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் எள் அறுவடை செய்து உலர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.