உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

கரூர், வெள்ளியணை அருகே, இளம் பெண்ணை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வெள்ளியணை வடக்கு ராஜா தெருவை சேர்ந்த மோகன்தாஸ் என்பவரது மகள் கார்த்திகா, 23; திருமணமாகாதவர். இவர் கடந்த, 2ல், வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் அவர் செல்லவில்லை. இதுகுறித்து அவரது தந்தை மோகன்தாஸ், போலீசில் புகார் செய்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி