உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

இளம் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்

கரூர், கரூர் அருகே, மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ராயனுார் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் காவியா, 20. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கடந்த, 7ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், காவியா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை ராஜசேகர், போலீசில் புகார் செய்தார்.தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி