மேலும் செய்திகள்
மாதா தேர் திருவிழா
21-Sep-2025
கரூர், கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில், 95 வது தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.பிரசித்தி பெற்ற புனித தெரசம்மாள் ஆலயத்தில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு நேற்று காலை, பங்கு தந்தை லாரன்ஸ் தலைமையில், ஆலய வளாகத்தில் கொடியேற்று விழா நடந்தது. அதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அதை தொடர்ந்து, சிறப்பு திருப்பலி நடந்தது. வரும், 12ம் தேதி இரவு தேர்த்திருவிழா நடக்கிறது. அதற்கான, ஏற்பாடுகளை புனித தெரசம்மாள் ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
21-Sep-2025