உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் பூக்கள் விலை சரிவு

கிருஷ்ணராயபுரத்தில் பூக்கள் விலை சரிவு

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், மாயனுார், செக்கணம், காட்டூர், எழுதியாம்பட்டி, சேங்கல், புதுப்பட்டி, தாளியாம்பட்டி பகுதிகளில் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பூக்கள் அறுவடை செய்யப்பட்டு குளித்தலை, முசிறி, கரூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்படும் பூ மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை நடக்கிறது. கடந்த வாரத்தில் இருந்து, தொடர்ந்து பூக்கள் வரத்து காரணமாக விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.விரிச்சிப்பூக்கள் கிலோ, 50 ரூபாய், சின்ன ரோஜா கிலோ, 70 ரூபாய், செண்டுமல்லி கிலோ, 20 ரூபாய், மல்லிகை, 200 ரூபாய்க்கு விற்பனையானது. முகூர்த்த சீசன் குறைவு காரணமாக, பூக்கள் விலை சரிந்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ