டி.என்.பி.எல்., சார்பில் இலவச மருத்துவ முகாம்
கரூர், அக். 27-டி.என்.பி.எல்., (புகழூர் காகித ஆலை) சார்பில், 297வது இலவச மருத்துவ முகாம் நடந்தது.அதில், காகித ஆலையை சுற்றியுள்ள ஓனவாக் கல் மேடு, நாணப்பரப்பு, கந்தசாமிபாளையம், நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன் புதுார், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.டாக்டர்கள் ராஜா, ராஜலட்சுமி ஆகியோர், 200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ பரி சோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர்.