கரூர்-வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பை
கரூர்-வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பைகரூர், அக். 24-கரூர்-வாங்கல் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், வாங்கல் சாலையில் கடந்த சில நாட்களாக, அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. குறிப்பாக, இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் அதிகளவில் குவிந்துள்ளன. அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், சாலையில் குவிந்துள்ள குப்பை காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள், டூவீலர்களில் செல்கிறவர்கள் தடுமாறுன்றனர். குறிப்பாக, வாங்கல் சாலை வாங்கப்பாளையம் பிரிவில் அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. குப்பையை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.