உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இரும்பூதிப்பட்டியில் ஆடு, கோழி விற்பனை மந்தம்

இரும்பூதிப்பட்டியில் ஆடு, கோழி விற்பனை மந்தம்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, இரும்பூதிப்பட்டி சந்தையூரில் நேற்று வாரச்சந்தை நடந்தது.நேற்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் ஆடு, கோழிகள் விற்பனை மந்தமாக காணப்பட்டது. 7 கிலோ கொண்ட ஆடு, 6,400 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 7 கிலோ ஆடு, 600 ரூபாய், நாட்டுக்கோழி கிலோவுக்கு, 50 ரூபாய் விலை குறைந்தது.இந்த மாதம் முழுவதும் விற்பனை மந்தமாக இருக்கும் என வியாபாரிகள் கூறினர். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையின் போது ஆடு, கோழிகள் விற்பனை அதிகரிப்பதுடன், விலையும் அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை