மகாதானபுரம் வர கவர்னருக்கு அழைப்பு: ராஜாராம் தகவல்
கரூர்: கரூர் அருகே, மகாதானபுரத்துக்கு வர வேண்டும் என, தமிழக கவர்னர் ரவிக்கு, காவிரி நீர்ப்பாசன நலச்சங்க தலைவர் மகாதான-புரம் ராஜாராம் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டம், மகாதானபுரத்தில் மிகவும் பழமையான வேத பாடசாலை செயல்படுகிறது. காவிரியாற்று படுகையில் உள்ள மகாதானபுரத்தில் நெல், வாழை, வெற்றிலை சாகுபடி செய்யப்ப-டுகிறது. கவர்னர் மாளிகையில் நடந்த, தமிழ்நாடு மாநிலம் உத-யநாள் விழாவில், கவர்னர் ரவியை மகாதானபுரத்துக்கு வந்து, வேத பாடசாலை, சாகுபடி பணிகளை பார்வையிடுமாறு நேரில் அழைப்பு விடுத்துள்ளேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.