சிமென்ட் கலவை போட்டு பல நாள் ஆச்சு எப்ப சார் தார் சாலை போடுவீங்க?
கரூர்: கரூர் அருகே, சிமென்ட் கலவை போட்டு பல நாட்கள் ஆகியும், தார் சாலை அமைக் கப்படவில்லை. இதனால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது.கரூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட, காந்தி கிராமம் டிரான்ஸ்போர்ட் நகர், எஸ்.வெள்ளாப்பட்டி கொங்கு நகர் உள்-ளிட்ட, பல்வேறு தெருக்களில், புதிதாக தார் சாலை அமைக்க சிமென்ட் கலவையுடன், ஜல்லிக்கற்கள் போடப்பட்டன. அந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. ஆனால், உரிய நேரத்தில் தார் சாலை அமைக்கவில்லை.இந்நிலையில், கரூர் நகரப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் நிலையில், சிமென்ட் கலவை பெரும்பாலும் கரைந்து விட்ட தால், ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறியுள்ளன. இதனால், அதன் வழியாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, டூவீலர்களின் டயர்கள், அடிக்கடி பஞ்சர் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சிமென்ட் கலவை போடப்பட்ட தெருக்களில், உடனடி-யாக, தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.