மேலும் செய்திகள்
நாட்டுக்கோழி வளர்ப்பு; சரவணம்பட்டியில் பயிற்சி
12-Dec-2024
கரூர், : ஜப்பானிய காடை வளர்ப்புப்பயிற்சி முகாம் இன்று நடக்கிறது என, கரூர் பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர், பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இன்று (18ம் தேதி) ஐப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. அண்மை காலமாக காடை இறைச்சி, மக்களிடையே பிரபலமாகி வருவதால், விவசாயிகளிடம் ஜப்பானிய காடை வளர்ப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜப்பானிய காடை வளர்ப்பு முறைகள், பண்ணை பொருளாதாரம், வங்கி கடனுதவி, விற்பனை வாய்ப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு, 04324 294335 மற்றும் 7339057073 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
12-Dec-2024