வாய்க்காலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பை அகற்ற கரூர் விவசாயிகள் வேண்டுகோள்
கரூர்: கரூர் அருகே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் குவிந்-துள்ள பிளாஸ்டிக் குப்பையை அகற்றி துார் வார வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால், கரூர் அருகே செல்லாண்-டிப்பாளையத்தில் சாலையின் குறுக்கே செல்கிறது. அதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து, சோளம் அறுவடை பணிக்காக குறைந்தளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்-ளது.ஆனால், செல்லாண்டிப்பாளையம் பாசன கிளை வாய்க்காலில் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பை தேங்கியுள்ளது. இதனால், அம-ராவதி ஆற்றில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் போது, கடை மடைபகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக சென்று சேர வாய்ப்-பில்லை.எனவே, அமராவதி ஆற்றில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கும் முன், செல்லாண்டிப்பாளையத்தில் சாலையின் குறுக்கே செல்லும், பாசன கிளை வாய்க்காலை துார் வார, பொதுப்பணி துறை அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசா-யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.