உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கீழே விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி

கீழே விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி

குளித்தலை:குளித்தலை அடுத்த பொய்யாமணி பஞ்., திருச்சாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலையாளம், 57. விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த 16 இரவு 10:00 மணியளவில் துாங்கிக் கொண்டிருந்த போது, சிறுநீர் கழிக்க எழுந்தார். அப்போது தவறி கீழே விழுந்துள்ளார். உடலில் காயம் ஏதும் இல்லாதததால் வீட்டிலேயே இருந்து விட்டார்.பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு, 18ம் தேதி மாலை 6:00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.இதுகுறித்து அவரது மனைவி ஸ்ரீதேவி, 47, கொடுத்த புகாரின்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை