மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் விளக்குகள் பழுதால் அபாயம்
கரூர்: கரூர் அருகே, போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளதால், அடிக்கடி விபத்து நடக்கிறது.கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பல்வேறு இடங்களில் போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்துகளை தடுக்கவும், சிக்னல் லைட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பல இடங்-களில் சிக்னல் லைட்கள் சேதமடைந்து எரியாத நிலையில் உள்-ளது. குறிப்பாக, கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அம்பாள் நகர் பிரிவு பகுதியில், பல மாதங்களாக சிக்னல் லைட்கள் எரி-யாமல் சேதமடைந்துள்ளன.இதனால், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கரூர் நகர பகுதிக்கு செல்லும் வாக-னங்கள், மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதியில் இருந்து, கோவை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் அடிக்-கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன.மேலும், கரூர் நகரில் இருந்து அம்பாள் நகர் உள்ளிட்ட, பல பகு-திகளுக்கு செல்லும் வாகனங்களும், விபத்து மற்றும் போக்குவ-ரத்து நெரிசலில் சிக்குவதால், சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்-றன.எனவே, கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை, அம்பாள் நகர் பிரிவில் செயல்படாமல் சேதமடைந்துள்ள சிக்னல் விளக்கு-களை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டு கோள் விடுத்துள்-ளனர்.