மேலும் செய்திகள்
நியமன உறுப்பினர் பதவியேற்பு
27-Nov-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., மேட்டு மருதுார் சமுதாய கூடத்தில், நேற்று முன்தினம் சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.அலுவலக பணியாளர் முத்துக்குமார் தீர்மானங்-களை வாசித்தார். டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்களுக்கு, நாள்தோறும் ஒரு வேளை காலை உணவு வழங்க வேண்டும். டவுன் பஞ்சாயத்தில், அரசு அறிவிக்கும் திட்டங்-களை நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்னுரிமை அடிப்-படையில், பல்வேறு பணிகள் மேற்கொள்ள பணிகள் தேர்வு செய்தல் உள்ளிட்ட 13 தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.கவுன்சிலர்கள், சுகாதார மேற்பார்வையாளர் பாக்-கியம், இளநிலை உதவியாளர் விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
27-Nov-2025