உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம்; மக்கள் எதிர்பார்ப்பு

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம்; மக்கள் எதிர்பார்ப்பு

கரூர் : க.பரமத்தியில், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், வளர்ந்து வரும் நகராக க.பரமத்தி உள்ளது. இங்குள்ள பஞ்சாயத்து யூனியனில், 30 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையையொட்டி, கிராம பஞ்சாயத்துக்கள் அடங்கியுள்ளதால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது.அப்போது, வாகனங்கள் தீ பிடித்து எரிந்தாலோ, தீ விபத்துக்கள் ஏற்பட்டாலோ, அதை அணைக்கும் வகையிலும், உயிரிழப்புகளை தடுக்கவும், க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் இல்லை. இதனால், க.பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால், கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் எளிதாக செல்ல முடியாது. இதனால் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ