முட்புதருக்குள் சின்டெக்ஸ் தொட்டி சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
கரூர்,கரூர் அருகே, முட்புதருக்குள் சின்டெக்ஸ் தொட்டி உள்ளதால் சீரமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாநகராட்சி, வெங்கமேடு குளத்துபாளையம் பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் வசித்து வரும், பொதுமக்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில், குடிநீர் குழாய் போடப்பட்டது. மேலும், போர்வெல் அமைக்கப்பட்டு, மின் மோட்டாரும் பொருத்தப்பட்டது.இந்நிலையில், சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி, முட்புதர்கள் முளைத்துள்ளன. போர்வெல் குழாய்களும் சேதமடைந்துள்ளதால், நிலத்தடி நீரை சரிவர பெற முடியாமல் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் மாநகராட்சி நிர்வாகம், சேதமடைந்த குடிநீர் குழாயை சரி செய்து, சின்டெக்ஸ் தொட்டியை, சுற்றியுள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.