கழிப்பிடம் இன்றி மக்கள் சிரமம்
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே, வடக்கு தெரு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் பலரது வீடுகளில், கழிப்பிட வசதி இல்லை. நங்காஞ்சி ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் நங்காஞ்சியாற்றில், மேலும் அசுத்தமாக்கி அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே நங்காஞ்சி ஆற்றுக்கு செல்லும் பாதையில், பொது கழிப்பிடம் கட்ட வேண்டும்.