மேலும் செய்திகள்
பிரதோஷ வழிபாடு
09-Jul-2025
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த, ஆடி மாத பிரதோஷ விழாவில், நேற்று ஏராளமானோர் பங்கேற்றனர்.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு, ஆடி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை, 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது.ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு மஹா தீபாராதனை காட்டிய பிறகு பிரசாதம் வழங்கப்பட்டது.நந்தி சிலை வெள்ளி கவசம் மூலம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.* நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை, சமேத மேகபாலீஸ்வரர் கோவில், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
09-Jul-2025