உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செப்.,8ல் பிரதம மந்திரி அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம்

செப்.,8ல் பிரதம மந்திரி அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம்

கரூர், கரூர், வெண்ணைமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுனர் (அப்ரன்டீஸ்) சேர்க்கை முகாம் வரும், 8ல் நடக்கிறது. அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து, இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சியை மேற் கொள்ளாத பயிற்சியாளர்கள் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுனர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்ளலாம். தொழிற்பழகுனர் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட தொழிற்நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுனர்களை தேர்வு செய்யலாம். மேலும் விபரம் பெற, 04324-299422, 9443015914, 9566992442 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ