உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இலவச வீட்டுமனையை அளந்து அத்து காட்டக்கோரி போராட்டம்

இலவச வீட்டுமனையை அளந்து அத்து காட்டக்கோரி போராட்டம்

குளித்தலை: குளித்தலை அடுத்த பிள்ளபாளையம் பஞ்., கொம்பாடிபட்-டியில், கடந்த, 2001ல், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், இல-வச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இலவச வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு செய்த, 54 பேருக்கு அவர்களுக்குரிய இடத்தை சர்வே செய்து, பட்டா தராமல் காலம் தாழ்த்தி, 2011ல் அந்த பட்-டாக்களை ரத்து செய்துள்ளனர். அதை தொடர்ந்து, மேலும், 43 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆணை பிறப்பித்தும், அவர்களுக்கு வீட்டு-மனை வழங்கப்படவில்லை. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மற்றும் சி.பி.ஐ., கட்சியினர் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், கடந்த, 2022 ஜன.,ல், குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில், அவர்களுக்கு உரிய இடத்தை வழங்குவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை அவர்களுக்கு உரிய இடத்தை அளந்து பட்டா வழங்கப்படாததால், ஆவேசமடைந்த பகுதி மக்கள், நேற்று காலை, 10:30 மணிக்கு, குளித்தலை பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று, குளித்தலை உதவி கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து, தமிழக அரசை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இலவச வீட்டுமனையை அளந்து, உரியவர்களுக்கு வழங்கப்படாதை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்-பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் விஜயா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 'இன்று நிலத்தை அளந்து அத்து காட்டப்படும்; ஜன., இறு-திக்குள் இலவச பட்டா வழங்க முடிவு செய்யப்படும்' என, தெரி-வித்ததை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை