மாவட்டத்தில் மழையால் கோரை அறுவடை பாதிப்பு
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், சில நாட்களாக மழை பெய்து வருவதால், கோரைப்புல் அறுவடை பாதிக்கப்பட்டுள்-ளது.கரூர் மாவட்டத்தில், கோரைப்புல் சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த சாகுபடி செலவு, அதிக நாட்களுக்கு அறுவடை, மழை இல்லாத காலத்திலும் தொடர்ந்து வளரும் தனித்தன்மை, நீண்ட கால வருமானம் உள்-ளிட்ட காரணங்களால் கோரைப்புல் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.கரூர் அருகே, நெரூர், செவிந்திப்பாளையம், ஒத்தக்கடை, பஞ்ச-மாதேவி, மறவாப்பாளையம், கோயம்பள்ளி, புதுப்பாளையம், வாங்கல், திருமாக்கூடலுார், கடம்பங்குறிச்சி, அரங்கநாதன் பேட்டை உள்ளிட்ட காவிரியாற்று பகுதிகளில் கோரைப்புல் சாகு-படி செய்யப்படுகிறது. இதன் மூலம் பாய்கள், வீட்டு அலங்கார பொருட்கள், கூடைகள், இருக்கைகள் ஆகியவை உற்பத்தி செய்-யப்படுகிறது. இதனால், கோரைப்புல்லுக்கு அதிக கிராக்கி ஏற்பட்-டுள்ளது.இந்நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த, சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கோரைப்புல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. கோரைப்புல்லை அறுவடை செய்து, காய வைத்துதான் பாய் உற்பத்தி உள்ளிட்ட அலங்கார பொருட்களை செய்ய முடியும். ஆனால், மழை காரணமாக, கோரைப்புல்லை காய வைக்க முடியவில்லை என, விவசாயிகள் புலம்புகின்றனர்.இதுகுறித்து, கோரை விவசாயிகள் கூறியதாவது:அறுவடை செய்த கோரைப்புல்லை காயவைத்து, உடனடியாக பாய் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விட வேண்டும். இல்-லையென்றால், கோரைப்புல் நிறம் மாறி விடும். உடைந்து விழும். இதை கொண்டு பாய் தயாரிக்க முடியாது. இதன் காரண-மாக, கோரைப்புல்லை மழைக்காலங் களில் அறுவடை செய்ய முடியாது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும், 25 நாள் உள்ளதால், கோரைப்பாய்க்கு ஆர்டர் நிறைய வந்துள்ளது. ஆனால், மழை பெய்து வருவதால், அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், ஒரு பக்கம் கோரைப்புல்லுக்கு விலை குறைந்து வரு-கிறது. 16 இன்ச் கொண்ட கோரைப்புல் ஒரு கட்டு, 1,500 ரூபாய் வரை விலை போனது. தற்போது, 900 ரூபாய் கிடைப்பதே அரி-தாக இருந்தது. தற்போது, மழை காரணமாக அறுவடை செய்யப்-பட்டு ஸ்டாக் உள்ள கோரைப்புல்லுக்கு, 750 ரூபாய் தான் கிடைக்கிறது. இதனால், கிடைக்கும் விலைக்கு விற்க வேண்டிய நிலை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.