உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரஸ்தாளி வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை

ரஸ்தாளி வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருப்பத்துார், கள்ளப்பள்ளி, கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, பிள்ளபாளையம், மகிளிப்பட்டி, நந்தன் கோட்டை ஆகிய பகுதிகளில், வாழை சாகுபடி அதிகளவில் நடக்கிறது.விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்யும் விவசாயிகள், லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்கின்றனர்.இதில் பூவன் தார் ஒன்று, 250 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை