மேலும் செய்திகள்
கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200க்கு விற்பனை
26-May-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதா-னபுரம், பொய்கைப்புத்துார், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. விளைந்த வாழைத்தார்-களை அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்-கின்றனர். இதில், பூவன் வாழைத்தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்-பட்டது. வாழைத்தார்களை உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர். வாழைத்தார் வரத்து அதிகரித்ததால், சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டது.
26-May-2025