உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க வரவேற்பு கூட்டம்

ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க வரவேற்பு கூட்டம்

கரூர்: தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில், மாநில மாநாடு வரவேற்பு குழு கூட்டம், மாநில தலைவர் முரளி-தரன் தலைமையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது. அதில், கரூரில் வரும் ஜன., மாதம் இரண்டாவது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது, 70 வயதை கடந்த ஓய்வூதியம் பெறும் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் ஓய்வூதியத்தில், 10 சத-வீதம் கூடுதலாக வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்-டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் பர்வதராஜன், பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை