ரூ.45.49 லட்சத்துக்கு தேங்காய், தேங்காய் பருப்பு விற்பனை
ரூ.45.49 லட்சத்துக்கு தேங்காய்,தேங்காய் பருப்பு விற்பனைகரூர், அக். 23- ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 45 லட்சத்து, 49 ஆயிரத்து, 558 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேங்காய் சாகுபடி நடக்கிறது. இங்கு தேங்காய்களை உடைத்து, காய வைத்து தங்கள் தேவைக்கு எண்ணெய் எடுத்தது போக மீதமுள்ள பருப்பு, தேங்காய்களை நொய்யல் அருகில் உள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் நடக்கும் ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் விவசாயிகள், 6,280 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 29.05 ரூபாய், அதிகபட்சமாக, 41.20 ரூபாய், சராசரியாக, 38.30 ரூபாய்க்கு போனது. மொத்தம், 1,894 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 68 ஆயிரத்து, 885 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் கொப்பரை தேங்காய், 777 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 115.99 ரூபாய், அதிகபட்சமாக, 122.49 ரூபாய், சராசரியாக, 121.99 ரூபாய்க்கு விற்பனையானது.இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 89.79 ரூபாய், அதிகபட்சமாக, 118.99 ரூபாய், சராசரியாக, 107.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 40 ஆயிரத்து, 113 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய் பருப்பு, 44 லட்சத்து, 80 ஆயிரத்து, 673 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 45 லட்சத்து, 49 ஆயிரத்து, 558 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.