உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எரியும் குப்பையில் விழுந்த துாய்மை பணியாளர் பலி

எரியும் குப்பையில் விழுந்த துாய்மை பணியாளர் பலி

கரூர்: கரூர் மாவட்டம், வாங்கல் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி, 54; குப்புச்சிப்பாளையம் கிராம பஞ்.,ல் தற்காலிக துாய்மை பணியாளராக, வேலை செய்து வந்தார். கடந்த, 31ல் சீனிவாசபுரம் பாப்புலர் வாய்க்கால் அருகே, குப்பை எரிக்கப்பட்டது. அப்போது, அந்த வழியாக சென்ற பழனி, எதிர்பாராதவிதமாக எரிந்து கொண்டிருந்த குப்பையில் தவறி விழுந்தார். அதில், பலத்த தீக்காயமடைந்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, பழனியின் மனைவி ஜெயா, 50, கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை