சாத்தாயி அம்மன் கோவில் திருப்பணி; தொல்லியல் வல்லுனர் ஆய்வு
குளித்தலை, குளித்தலை அடுத்த, நங்கவரம் பிடாரி சாத்தாயி அம்மன் கோவில் திருப்பணி மேற்கொள்வதற்கு, தொல்லியல் வல்லுனர் அர்ஜூனன் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.திருப்பூர் இணைஆணையர் ரத்தினவேல் பாண்டியன் உத்தரவின்படி, எம்.எல்.ஏ., மாணிக்கம் பரிந்துரையின்படி, நங்கவரம் பிடாரி சாத்தாயி அம்மன் கோவில் மற்றும் குளித்தலையில் உள்ள பத்து கோவில்களுக்கு திருக்குட முழுக்கு திருப்பணி மேற்கொள்ள தொல்லியல் வல்லுனர் அர்ஜூனன் தலைமையில், செயல்அலுவலர் நரசிம்மன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஸ்தல ஆய்வு செய்தனர். வரும் நவம்பரில் திருக்குடமுழுக்கு செய்திட, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.