உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சீரான விலையில் பூக்கள் விற்பனை

சீரான விலையில் பூக்கள் விற்பனை

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில், சீரான விலையில் பூக்கள் விற்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனுார், செக்கணம், எழுதியாம்பட்டி, தாளியாம்பட்டி, புதுப்பட்டி, சேங்கல், உடையந்தோட்டம், மகிளிப்பட்டி, ஆகிய இடங்களில் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். கரூர், திருச்சி, முசிறி, குளித்தலை ஆகிய இடங்களில் செயல்படும் பூ மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சீரான விலையில் பூக்கள் விற்பனை நடக்கிறது.விரிச்சிப்பூக்கள் கிலோ, 100 ரூபாய், சின்ன ரோஜா, 150, செவ்வந்தி, 250, மல்லிகை பூ கிலோ, 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ