உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகன் மாயம்; போலீசில் தாய் புகார்

மகன் மாயம்; போலீசில் தாய் புகார்

குளித்தலை, குளித்தலை அடுத்த, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி, 44, கூலித் தொழிலாளி. இவரது மகன் கார்த்திக், 27, பி.பி.ஏ., இரண்டு ஆண்டு படித்துவிட்டு இடையில் படிப்பை நிறுத்திவிட்டார். திருச்செங்கோட்டில் உள்ள பேக்கரியில், இரண்டு மாதங்களாக தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 6ம் தேதி தனது ஊருக்கு வந்தவர், வேலை செய்த சம்பளம் இதுவரை கொடுக்கவில்லையே என அவரது தாய் கேட்டுள்ளார்.மன விரக்தியில் இருந்த கார்த்திக் கடந்த 12ம் தேதி மாலை 5:00 மணியளவில் வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகனை கண்டுபிடித்து தரும்படி, தாய் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை