மேலும் செய்திகள்
மேகபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
16-Sep-2024
கரூர், அக். 16-கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில், நேற்று ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. பிறகு, நந்தி சிலைக்கு வெள்ளி கவசம் பொருத்தப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* வேலாயுதம்பாளையம் அருகே, நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேக மாலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை யொட்டி, நேற்று மாலை நந்தி சிலைக்கு, வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. மூலவர் மேகபாலீஸ்வரர் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.* குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், மேட்டுமருதுார் ஆராஅமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் நதிஈஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர், சின்னரெட்டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
16-Sep-2024