டி.என்.பி.எல்., நிறுவனத்தில் ரத்ததான சிறப்பு முகாம்
கரூர், :புகழூர், தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறுவனத்தில், ரத்த தான முகாம் நடந்தது.முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் தொடங்கி வைத்தார். ரத்த தானம் செய்தவர்களுக்கு பழச்சாறு, ஹார்லிக்ஸ், குளுக்கோஸ் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன. ஆலை பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், ஒப்பந்த பணியாளர்கள், தொழில் பழகுனர்கள், பொதுமக்கள் என மொத்தம், 172 பேர் ரத்த தானம் செய்தனர். கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி சுகாதார மைய டாக்டர் ராஜா, ரத்த வங்கி டாக்டர்கள் அறிவழகன், மோகனப்பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.