உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழிமலை கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை

புகழிமலை கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை

கரூர்: புகழிமலை, பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டியை யொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்-தது.பிரசித்தி பெற்ற, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு, கார்த்திகை மாத வளர்-பிறை சஷ்டியை யொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்-காரத்தில் மூலவர், பக்தர் களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாரா-தனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை