உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேட்டில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, 57 பயனாளிகளுக்கு, 14.36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கரூர் நகர கூட்டுறவு வங்கி சார்பில், தளிர் மகளிர் சுயஉதவிக்குழுக்கு ரூ.௧௦ லட்சம் கடனுதவி, வருவாய்த் துறையின் சார்பில், 30 நபர்களுக்கு பட்டா மாறுதல், இறப்பு சான்று, விதவை சான்று, இருப்பிட சான்று உள்ளிட்டவையும், கூட்டுறவு துறை சார்பில், 3 விவசாயிகளுக்கு, 2.26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவி, மகளிர் திட்டம் சார்பில், 2.10 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 பயனாளிகளுக்கு அமுத சுரபி கடனுதவி வழங்கப்பட்டது. முகாமில் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.