உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை தேவைq

கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை தேவைq

கரூர்: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், பிவித்திரம், குப்பம், புன்னம்சத்திரம், கார்வழி, தென்னிலை, சின்னதாராபுரம், துலுக்கம்பாளையம், எலவனுார், முடிகணம், கோடந்துார் ஆகிய, 11 கால்நடை மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. குக்கிராமங்களில் தற்போது போதிய மழை இல்லாததால் விவசாயத்தில் மிகவும் பின்தங்கிய வறட்சி பகுதியாக க.பரமத்தி உள்ளது. இங்கு கிணற்று நீரை கொண்டு விவசாயம் செய்தும், ஆடு, மாடு, எருமை கோழி போன்ற கால்நடைகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.கால்நடை வளர்ப்போருக்காக அவ்வப்போது க.பரமத்தி ஒன்றிய பகுதி கால்நடை மருந்தகங்கள் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் க.பரமத்தி ஒன்றிய பகுதியில் தென்னிலை, சின்னதாராபுரம் க.பரமத்தி ஆகிய, மூன்று பகுதிகளில் கால்நடைகள் அதிகம் வளர்க்கப்படுவதால், கால்நடைகளுக்கு நோய்கள் வரும் காலங்களில் இரவு நேரங்களில் சிகிச்சைக்காக இங்கிருந்து, கரூர், நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.சில நேரம், நோய் தாக்கும் கால்நடைகளை விவசாயிகள் தொலை துாரம் கொண்டு செல்வதற்குள் அவை இறக்கும் சூழ்நிலை உள்ளது. கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். கால்நடை மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ