உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வரும் 4 முதல் தொடக்கம்

ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வரும் 4 முதல் தொடக்கம்

கரூர், வரும் 4 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வகுப்பு தொடங்கும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இது குறித்து, அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் வெண்ணைமலையில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வகுப்புகள் வரும் நவ., 4 முதல் இணைய வழியில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுனர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படவுள்ளது. பயிற்சியில் சேர, 04324-223555 மற்றும் 6383050010 என்ற எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி