உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான சாலையால்கடும் அவதி

மோசமான சாலையால்கடும் அவதி

கிருஷ்ணராயபுரம், டிச. 17-லட்சுமணம்பட்டி பகுதியில் இருந்து செல்லும், அழகாபுரி சாலை மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த லட்சுமணம்பட்டி பகுதியில் இருந்து அழகாபுரி வரை தார் சாலை உள்ளது. இந்த சாலையை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.தற்போது லட்சுமணம்பட்டி கோவில் முதல், அழகாபுரி பிரிவு பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டது.இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறியபடி செல்கின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் போது சிரமப்படுகின்றனர். எனவே, சாலையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை