உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ரெங்கநாதர் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்

கரூர் ரெங்கநாதர் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்

கரூர்:அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில், சித்திரை திருவிழாவையொட்டி, நாளை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.கரூர், அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில், சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த, 2ல் கொடியேற்றத்துடன், சித்திரை திருவிழா தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் ரெங்கநாதர் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று மாலை சேஷ வாகனத்தில், உற்சவர் ரெங்கநாதர் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். நாளை மாலை, 4:00 மணிக்கு கோவில் வளாகத்தில், திருக்கல்யாண உற்வசம் நடக்கிறது. வரும், 10ல் தேரோட்டம், 11 ல் அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, 12ல் ஆளும் பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி