வரும் 28 முதல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி வகுப்பு தொடக்கம்
கரூர், : டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 28 முதல் தொடங்குகிறது.இது குறித்து, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் வெண்ணைமலையில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வரும், 28 முதல் தொடங்கப்படவுள்ளது. அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறு தேர்வு, வாராந்திர தேர்வு, இணையவழி தேர்வு, முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், அலுவலகம் வந்து நேரில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 94990 -55912 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.